இந்திய ஆயர் : ரமதான் மாதத்தில் சிரியாவுக்காகச் செபம்
ஜூலை,12,2013. இந்த ரமதான் மாதத்தில் அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்காகவும், குறிப்பாக,
சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்காகச் சிறப்பாகச்
செபிப்போம் என்று இந்தியாவின் Vasai பேராயர் Felix Machado கேட்டுக்கொண்டுள்ளார். உலகெங்கும்
வாழும் முஸ்லீம்கள் ரமதான் நோன்பு மாதத்தைக் கடைப்பிடித்துவரும்வேளை அவர்களுக்குத் தனது
வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ள பேராயர் Machado, செபம், நோன்பு, தியானம் ஆகியவற்றில்
ஈடுபட்டுள்ள முஸ்லீம்களுடன் இறைவன் எந்நாளும் உடன் இருப்பாராக என்றும் கூறியுள்ளார். இந்திய
ஆயர் பேரவை மற்றும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ
ஒன்றிப்பு ஆணைக்குழுக்களின் தலைவராகப் பணியாற்றுகின்றார் பேராயர் Machado. மேலும்,
ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் Raphael Louis Sako அவர்களும்,
உலகின் முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு, தனது அமைதியின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.