WHO : புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குப் பலன்
ஜூலை,12,2013. புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குப்
பலன் கிடைப்பதாக WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. பணியிடங்களில் புகைப்பிடித்தலுக்குத்
தடைவிதிப்பது, சிகரெட் பாக்கெட்டுகளில் நலக்கேடு பற்றிய எச்சரிக்கைகளை குறிப்பது உட்பட
புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், இலட்சக்கணக்கான
மக்களின் நலவாழ்வைப் பாதுகாத்துள்ளன என்று WHO நிறுவனம் கூறியுள்ளது. இன்று உலகில்
200 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இத்தகைய வாழ்வைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளால் பலன் அடைந்து
வருகின்றனர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புகையிலையைப் பயன்படுத்துவதால்
உலகில் ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறக்கின்றனர், தற்போதைய நிலை நீடித்தால்
2030ம் ஆண்டுக்குள் இவ்வெண்ணிக்கை 80 இலட்சத்தைத் தாண்டிவிடும் என்று உலக நலவாழ்வு நிறுவனம்
எச்சரித்துள்ளது.