2013-07-11 16:04:04

வளர் இளம் பருவத்தில் தாயாகும் பெண்கள் குறித்து ஐ.நா. கவலை


ஜூலை,11,2013. வளர் இளம் பருவத்தில் உள்ள பெண்கள் தாயாகும் நிலைக்கு உள்ளாவது உலகில் நிலவும் கவலை தரும் ஒரு போக்கு என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூலை 11, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட உலக மக்கள் தொகை நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், 'வளர் இளம் பருவத்தினரின் தாய்மைப் பேறு' என்று இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.
வளர் இளம் பருவத்தில் தாயாகும் நிலைக்குத் தள்ளப்படும் இளம் பெண்கள் தங்கள் உயிரையும், கருவில் வளரும் குழந்தைகளின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர்; இந்நிலையிலிருந்து அவர்களைக் காப்பது உலகச் சமுதாயத்தின் கடமை என்று பான் கி மூன் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட 1 கோடியே, 60 இலட்சம் வளர் இளம் சிறுமிகள் தாய்மைப் பேறு அடைகின்றனர் என்றும், இவர்களில் 32 இலட்சம் சிறுமிகள் தகுந்த மருத்துவ பாதுகாப்பு இன்றி கட்டாயக் கருகலைப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.