வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள லூர்து நகர் திருத்தலத்தைச் சீரமைப்பதற்கு இங்கிலாந்து
பேராயர் நிக்கோல்ஸ் விண்ணப்பம்
ஜூலை,10,2013. உலகப் புகழ்பெற்ற லூர்துநகர் திருத்தலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால்
உருவான பாதிப்புக்களை சரிசெய்ய இங்கிலாந்து மக்கள் நிதி உதவி செய்யவேண்டும் என்று இங்கிலாந்து
பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் விண்ணப்பித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்தின்
Westminster உயர்மறைமாவட்டம் ஜூலை 21ம் தேதி முதல் 27ம் தேதி முடிய லூர்து நகருக்குத்
திருப்பயணம் செல்வது வழக்கம். இவ்வாண்டு மேற்கொள்ளப்படும் இத்திருப்பயணத்தின்போது, வெள்ள
நிவாரணப் பணிகளுக்கு திருப்பயணிகள் நிதி உதவி செய்யுமாறு பேராயர் நிக்கோல்ஸ் விண்ணப்பித்துள்ளார். அயர்லாந்திலிருந்தும்,
இங்கிலாந்திலிருந்தும் ஜூலை மாதம் லூர்து நகர் செல்லும் திருப்பயணிகளுக்கு, நதியின் ஓரத்தில்
வழக்கமான இடங்களில் நடைபெறும் திருப்பலிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பயணிகளையும் வேளாண்மையையும் நம்பி வாழும் லூர்து நகர்
மக்கள் இந்த வெள்ளத்தின் பாதிப்புக்களைக் கடந்து வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும்
என்று திருப்பயணங்களை ஏற்பாடு செய்யும் அருள் பணியாளர் Denis Touw கூறியுள்ளார்.