திருத்தந்தை பிரான்சிஸ்: கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்ற
நாம் விழைந்தால், சுகமானவாழ்வைத் தெரிவு செய்யமுடியாது
ஜூலை,10,2013. கிறிஸ்துவை நெருங்கிப் பின்பற்ற நாம் விழைந்தால், சுகமான, அமைதியான வாழ்வை
நாம் தெரிவு செய்யமுடியாது. அத்தகைய வாழ்வு மிகவும் சவால்கள் நிறைந்ததாக, அதேநேரம், மகிழ்வு
நிறைந்ததாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று Twitter செய்தியொன்றை
அனுப்பியுள்ளார். ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம், லத்தீன் ஆகிய மொழிகள்
உட்பட ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில்
திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் பெயரால் திருப்பீடம்
இப்புதனன்று வெளியிட்டுள்ள ஒரு Twitter செய்தியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள்
நன்னெறியின் அடிப்படையில், பொறுப்புள்ள வகையில் அமைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.