2013-07-09 15:32:12

ரியோ டி ஜெனிரோ 28வது அனைத்துலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வோர்க்குப் பரிபூரணபலன்


ஜூலை,09,2013. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இம்மாதம் 22 முதல் 28 வரை இடம்பெறவிருக்கும் 28வது அனைத்துலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வோர்க்குப் பரிபூரணபலனை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தினத்தில் கலந்து கொள்ள இயலாமல், ஊடகங்கள் வழியாக இத்தின நிகழ்வுகளில் ஆன்மீகரீதியில் பங்கு கொள்வோர்க்கும் பரிபூரணபலனை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பரிபூரணபலனைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருள்சாதனம், திருநற்கருணை ஆகிய அருள்சாதனங்களில் பங்குபெற்று திருத்தந்தையின் கருத்துகளுக்காகச் செபிக்க வேண்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிபூரணபலன் வழங்கும் இச்சலுகையை அறிவிக்கும் அறிக்கையில், திருப்பீடப் பாவமன்னிப்புச்சலுகை துறையின் தலைவர் கர்தினால் Manuel Monteiro de Castro, செயலர் ஆயர் Krzysztof Nykiel ஆகிய இருவரும் கையெழுத்திட்டு அதனை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.