2013-07-08 17:12:22

தூய ஆவியால் நாம் வழிநடத்தப்பட அனுமதிப்பதைச் சார்ந்தே நற்செய்தி அறிவிப்பின் வெற்றி உள்ளது


ஜூலை,08,2013. நற்செய்தியை பரப்புவது என்பது அதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தல்ல, மாறாக இயேசுவின் அன்பு மற்றும் தூய ஆவியால் வழிநடத்தப்பட நம்மை அனுமதித்தலையும், இயேசுவின் சிலுவையை நோக்கி நம்மை வடிவமைப்பதையும் சார்ந்து உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.நற்செய்தி அறிவிப்புக்குப் பெரும் நிறுவனங்களோ, வளங்களோ தேவையில்லை, சிலுவையை அன்பு கூர்வதும் தூய ஆவியால் வழிநடத்தப்பட அனுமதிப்பதும் போதும் என இஞ்ஞாயிறு மூவேளை செபவேளையின்போது உரை வழங்கிய திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பில் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை, மாறாக, நம் கடமையை உணர்ந்து தொடர்ந்து செயலாற்ற வேண்டியதே அவசியம் என்றார் .
நற்செய்தி அறிவிப்பில் நாம்தான் முக்கிய காரணி என மார்தட்டிக்கொள்ளமுடியாது, ஏனெனில் இறைவனும் அவர் தரும் அருளுமே இங்கு முக்கியப் பங்காற்றுபவை எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நற்செய்தி அறிவிப்பில் நம் மகிழ்ச்சியெல்லாம், நாம் அவரின் நண்பர்களாக, சீடர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளோம் என்பதேயாகும் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.