2013-07-08 17:01:59

திருத்தந்தை : குடியேற்றதாரரை அரவணைக்கும் இதயத்தைக் கொடுக்குமாறு இறைவனிடம் செபிப்போம்


ஜூலை,08,2013. குடியேற்றதாரரை அரவணைக்கும் ஓர் இதயத்தைக் கொடுக்குமாறு நாம் இறைவனிடம் செபிப்போம். அதிகம் உதவி தேவைப்படும் மக்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை இறைவன் தீர்ப்பிடுவார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் லாம்பெதூசா தீவில் அடைக்கலம் தேடியுள்ள ஆப்ரிக்கக் குடியேற்றதாரரையும், இவர்களுக்கு உதவி செய்யும் அத்தீவின் மக்களையும் பார்வையிட்டு, குடியேற்றதாரருக்கு மனிதாபிமான உதவிகளுக்கு அழைப்புவிடுப்பதற்காக இத்திங்களன்று அரைநாள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் இதையொட்டியே அழைப்பும் விடுத்துள்ளார்.
தென் இத்தாலியின் லாம்பதூசா தீவிற்கு தன் முதல் திருப்பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தைக்காக நாம் அனைவரும் இணைந்து செபிப்போம் என, திருப்பீடச் செயலகமும் தன் டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.