2013-07-06 16:30:00

பங்களாதேஷின் புதிய திருப்பீடத் தூதர் பேராயர் ஜார்ஜ் கொச்சேரி


ஜூலை,06,2013. பங்களாதேஷின் புதிய திருப்பீடத் தூதராக, பேராயர் ஜார்ஜ் கொச்சேரி (George Kocherry) அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேராயர் ஜார்ஜ் கொச்சேரி அவர்கள், இதுவரை ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வந்தார்.
கேரளாவின் Changanacherryல் 1945ம் ஆண்டு பிறந்த பேராயர் ஜார்ஜ் கொச்சேரி, Changanacherry உயர்மறைமாவட்டத்துக்கென 1974ம் ஆண்டில் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் 1978ம் ஆண்டில் திருப்பீடத் தூதரகப் பணியில் சேர்ந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.