ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்குத்
திருத்தந்தை திருப்பலி
ஜூலை,06,2013. 66 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள், நவ துறவியர்
மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான்
தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ். நம்பிக்கை
ஆண்டின் ஒரு பகுதியாக, இக்குருத்துவ மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை
வழங்குவோருக்கு உரோமையில் இவ்வியாழன் முதல், கூட்டங்கள், திருநற்கருணை ஆராதனை, ஒப்புரவு
திருவருட்சாதனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இன்னும், இக்குருத்துவ
மாணவர்கள், நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோரை இச்சனிக்கிழமை மாலையில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பது அவரது இந்நாளையத் திட்டத்தில் உள்ளது.