2013-07-05 16:45:04

முதுபெரும் தலைவர் Sidrak : எகிப்திய மக்கள் நாட்டை மீண்டும் பெற்றுள்ள


ஜூலை,05,2013. எகிப்தின் அரசுத்தலைவர் மோர்சி இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு அந்நாட்டின் தலைமை நீதிபதி நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டின் காப்டிக் கத்தோலிக்கரின் அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவர் Ibrahim Isaac Sidrak, எகிப்திய மக்கள் அமைதியான முறையில் நாட்டை மீண்டும் பெற்றுள்ளனர் எனக் கூறினார்.
எகிப்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தலைவர் Sidrak, இப்புதன் மாலையிலிருந்து அந்நாட்டினர் விழாக் கொண்டாடுவதாகத் தெரிவித்தார்.
எகிப்தின் அரசியல் நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கும், நிலையான நாட்டின் தன்மைக்குமான அரசின் திட்டங்களுக்கு அந்நாட்டின் காப்டிக் கத்தோலிக்கத் திருஅவை தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த முதுபெரும் தலைவர் Sidrak, நாட்டில் காணப்படும் பல அடையாளங்கள் தாங்கள் சரியான பாதையில் செல்வதைக் காட்டுகின்றன எனவும் கூறுகினார்.
இதற்கிடையே, எகிப்தில் அதிபர் மோர்சி பதவி கவிழ்க்கப்பட்டமைக்கு எதிராக இவ்வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அந்நாட்டு இராணுவம் தேசிய நல்லிணக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.