2013-07-03 15:18:01

இந்திய கத்தோலிக்கத் தொழில் அதிபருக்கு சமுதாய மாற்றத்தை உருவாக்கியவர் என்ற விருது


ஜூலை,03,2013. தொழில்மயமான உலகைத் துணிவுடன் சந்திப்பதற்கு, ஏழைக் குழந்தைகளைத் தயார் செய்வது, அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்று இந்திய கத்தோலிக்கத் தொழில் அதிபரான, Agnelo Rajesh Athaide கூறினார்.
மும்பையைச் சேர்ந்த திருவாளர் Athaide அவர்கள், ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கணணிக் கல்வியை வழங்குவதற்கு, 1993ம் ஆண்டு முதல், கணணிக் கல்வி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளில், 3 இலட்சத்திற்கும் அதிகமான ஏழைச் சிறார் இந்த மையத்தில் கணணிப் பயிற்சி பெற்று, பல துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருவாளர் Athaide அவர்களின் பணியைப் பாராட்டி, India Leadership Conclave என்ற அமைப்பினர், அவருக்கு, சமுதாய மாற்றத்தை உருவாக்கியவர் என்ற விருதை அண்மையில் வழங்கியுள்ளனர்.
சமுதாய முன்னேற்றமும், தொழில் மற்றும் வர்த்தக உலகமும் இணைந்து செல்லவேண்டும் என்று தான் கண்டுவந்த கனவு நனவானது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பதாக, திருவாளர் Athaide அவர்கள், இவ்விருது வழங்கும் விழாவில் கூறினார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.