2013-07-03 15:16:35

அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பல்சமயத் தலைவர்கள் சமய சுதந்திரத்துக்கு வேண்டுகோள்


ஜூலை,03,2013. கருத்தடை தொடர்புடையவைகளிலும், அனைத்து நலவாழ்வுக் கொள்கைகளிலும் மத நம்பிக்கையாளர் தங்களின் மனச்சான்றுகளின்படி செயல்படுவதை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு மதிக்குமாறு, அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பல்வேறு மதங்களின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கத்தோலிக்கம், பிரிந்த கிறிஸ்தவ சபைகள், அனைத்துலக ஹரே கிருஷ்ணா கழகம் என அந்நாட்டின் பல்வேறு மதங்களின் தலைவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில், மனச்சான்றின்படி சமய சுதந்திரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனச்சான்றின் சுதந்திரம் அச்சுறுத்தலில் இருக்கின்றது என்றுரைத்துள்ள அத்தலைவர்கள், அந்நாட்டின் நலவாழ்வு மற்றும் மனிதநலப் பணிகள் குறித்த கொள்கைகள், எந்த ஒரு நிறுவனமும் தனிமனிதரும் தங்களின் மனச்சான்றின்படி நடப்பதற்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இந்தத் திறந்த கடிதத்தில் பல்வேறு சமயங்களின் 58 பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.