2013-07-02 14:39:29

திருத்தந்தை பிரான்சிஸ் : பாறையாகிய கிறிஸ்துவை விட்டு விலகி நாம் கிறிஸ்தவர்களாக வாழ முடியாது


ஜூலை,02,2013. நாம், பாறையாகிய கிறிஸ்துவை விட்டு விலகி கிறிஸ்தவர்களாக வாழ முடியாது. அவர் நமக்குச் சக்தியையும், உறுதியான தன்மையையும் வழங்குகிறார். அதோடு, மகிழ்வையும் மனஅமைதியையும் அருளுகிறார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் இச்செவ்வாய்க்கிழமையன்று இவ்வாறு எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்‏.
மேலும், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், வளர்ச்சி குறித்த, இக்காலத்துக்கு ஒத்துவராத மல்தூசியன் முறைகளை நியாயப்படுத்துவதற்கு, மக்கள்தொகை புள்ளி விபரங்கள் பயன்படுத்தப்பட முடியாது என்று இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.