ஜூலை,01,2013. அனைத்துலக அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இந்தியாவில்தான் 40 விழுக்காட்டினர்
உள்ளனர் என்றும், இதற்கு இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அமல்படுத்துவதில் சீரான
வழிகள் பின்பற்றப்படவில்லை என்றும், ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக இந்தியாவில், ஊட்டச்சத்து குறைவு வளர்ச்சி, இரத்தசோகை பாதிப்பு விகிதம்
ஆகியவை அதிக அளவில் உள்ளது எனக் கூறும், கனடாவை மையமாக கொண்டு செயல்படும் அரசு சாரா ஊட்டச்சத்து
ஆய்வு மையத்தின் தலைவர் எம்.ஜி.,வெங்கடேஷ் மன்னார், சீனா, நேபாளம், பிரேசில், வங்கதேசம்
ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை மிக மோசமாக உள்ளது என்றார். இந்தியாவில்,
திட்டங்கள், கொள்கைகள் செயல்படுத்துவதில், கையாள்வதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன, என்ற
மன்னார், சுகாதாரம், குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றம், கல்வி, கிராமப்புற
வளர்ச்சி ஆகிய துறைகளில் குறைபாடுகள் உள்ளன என்றும் கவலையை வெளியிட்டார் அவர்.