ஆகஸ்ட் மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணித் திட்டங்கள்
ஜூலை,01,2013. ஜூலை, ஆகஸ்ட் ஆகிய கோடை விடுமுறை மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
பொதுவானப் பணித் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளவேளை, வருகிற ஆகஸ்ட் 7, 14, 21, 28 ஆகிய
புதன்கிழமைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைபோதகங்கள் இடம் பெறாது
எனத் திருப்பீடம் அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன்
பொது மறைபோதகம் வருகிற செப்டம்பர் 4ம் தேதியன்று மீண்டும் தொடங்கும் எனவும் திருப்பீடம்
அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் மூவேளை செப உரைகள் வத்திக்கானில்
இடம்பெறும். ஆயினும், ஆகஸ்ட் 15ம் தேதி அன்னைமரியின் விண்ணேற்பு விழாவன்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் காஸ்தெல் கந்தோல்ஃபோ பங்கில் திருப்பலி நிகழ்த்துவார். பின்னர் அங்கிருக்கும்
பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்திலிருந்து நண்பகல் மூவேளை செப உரையை வழங்குவார் என்றும்
திருப்பீடம் அறிவித்துள்ளது.