2013-06-29 15:23:12

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவில் நாம் இழப்பது எதுவுமில்லை


ஜூன்,29,2013. ஒரு கொடை அல்லது தியாகம் போன்று கிறிஸ்துவுக்காக நம் வாழ்வை இழப்பதற்குக் கற்றுக்கொள்வோம். கிறிஸ்துவில் நாம் இழப்பது ஒன்றுமில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‏@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் எழுதியுள்ளார்.
மேலும், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், திருஅவையின் மறைப்பணி ஆர்வம் மற்றும் ஒன்றிப்பின் அடையாளங்களாக விளங்கும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து சிறப்பிப்போம் என்று இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.