திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவில் நாம் இழப்பது எதுவுமில்லை
ஜூன்,29,2013. ஒரு கொடை அல்லது தியாகம் போன்று கிறிஸ்துவுக்காக நம் வாழ்வை இழப்பதற்குக்
கற்றுக்கொள்வோம். கிறிஸ்துவில் நாம் இழப்பது ஒன்றுமில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில்
இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில்
எழுதியுள்ளார். மேலும், திருப்பீடச் செயலகம் @TerzaLoggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில்,
திருஅவையின் மறைப்பணி ஆர்வம் மற்றும் ஒன்றிப்பின் அடையாளங்களாக விளங்கும் புனிதர்கள்
பேதுரு, பவுல் பெருவிழாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து சிறப்பிப்போம்
என்று இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளது.