2013-06-25 16:01:55

உலகளாவிய வணிகத்துக்கு உதவும் கடல்தொழிலாளருக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு


ஜூன்,25,2013. உலகில் கடலில் வேலைசெய்யும் 15 இலட்சம் தொழிலாளர்களின் உதவியின்றி அனைத்துலக வணிகம் இடம்பெறாது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூன் 25, இச்செவ்வாயன்று அனைத்துலக கடல்போக்குவரத்துப் பணியாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், உலக அளவில் கடல் வழியாகப் போக்குவரத்துப் பணி செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.
மேலும், இத்தினத்தைச் சிறப்பிக்கும் IMO என்ற அனைத்துலக கடல்போக்குவரத்துப் நிறுவனம், அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் பல்வேறு பொருள்களைக் கடல்வழிப் போக்குவரத்து வழியாக விநியோகிக்கும் மக்களின் பணிகள் ஊடகங்கள் வழியாக மேலும் விளக்கப்பட வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.