ஜூன்,21,2013. திருஅவையை வழிநடத்துபவர் ஆண்டவர் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
நமது அப்போஸ்தலத்துவத்தைப் பயனுள்ளதாக்குபவர் அவரே என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், “சமய சுதந்திரத்துக்கான 15 நாள்கள்”
என்ற ஒரு நிகழ்வைத் தொடங்கும் நம் அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து
செபிப்போம் என்று திருப்பீடச் செயலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று
எழுதியுள்ளது.