நைஜீரியாவில் நான்கு கிறிஸ்தவ கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன
நைஜீரியாவின் வடமாநிலங்களில் ஒன்றான Bornoவில் நான்கு கிறிஸ்தவ கோவில்கள் இஸ்லாமிய குமபல்
ஒன்றால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் Boko Haram என்ற அடிப்படைவாதக்
குழுவால் இது ஆற்றப்பட்டிருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார் நைஜீரிய ஆயர்
பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama. ஆயுதம் தாங்கிய இக்கும்பல், கை
வெடிகுண்டுகளை வீசி 4 கோவில்களை தீயிட்டு சேதப்படுத்தியுள்ளதுடன், மக்களின் கால்நடைகளையும்
அவர்களின் தானியச் சேமிப்புகளையும் திருடிச் சென்றுள்ளது. இத்தகைய தீவிரவாதக் குழுக்களை
ஒடுக்க, நைஜீரியா, நைஜர் மற்றும் மாலி நாடுகள், ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்
என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார் பேராயர் Kaigama