நாம் சட்டத்தின் அடிமைகள் அல்ல, இறைவனின் குழந்தைகள் - திருத்தந்தை பிரான்சிஸ்
நாம் சட்டத்தின் அடிமைகளாக இல்லை, மாறாக, இறைவனின் குழந்தைகளாக சுதந்திரத்தைப் பெற்றதன்
வழி அருளின் கீழ் வாழ்பவர்களாக உள்ளோம் என, உரோம் மறைமாவட்ட கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு
இத்திங்களன்று மாலை, வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் உரை வழங்கினார்
திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருமுழுக்கு வழங்குபவர்களுக்கு
இயேசுவின் துணை தேவை என்ற கருத்தை மையமாக வைத்து இடம்பெற்ற மறைமாவட்ட மாநாட்டில் கலந்து
கொண்டோரை, உரோம் ஆயர் என்ற முறையில் இத்திங்கள் மாலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை,
இறைவனிடமிருந்து இலவசமாகப்பெற்ற அருளை நாம் இலவசமாக வழங்க அழைக்கப்படுகிறோம் எனக்கூறியதுடன்,
இறைவனை அன்புகூர நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கூறினார். இறைவன் வழங்கும்
விடுதலை கண்டோ, அவர் வழங்கும் அருள் குறித்தோ நாம் அஞ்சத்தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை. நாம் அஞ்சாமல் நற்செய்தி அறிவிப்புப்பணியை மேற்கொள்வோம் என்ற ஊக்கத்தையும்
வழங்கினார் திருத்தந்தை.