2013-06-14 16:40:34

வத்திக்கான் அதிகாரி : போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைளில் குடும்பங்கள் மையப்படுத்தப்பட வேண்டும்


ஜூன்,14,2013. போதைப்பொருள் தடுப்பு சார்ந்த கொள்கைகளில் மனித மாண்புக்கும் குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் கேட்டுக் கொண்டார்.
குவாத்தமாலா நாட்டின் Antiguaவில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பாகப் பேசிய பேராயர் சுள்ளிக்காட், அனைத்து மக்களின் மாண்பையும், குறிப்பாக, நம் எதிர்காலத்தைக் குறித்து நிற்கும் இளையோரையும் பாதுகாப்பது நமது ஒன்றிணைந்த முயற்சியாக அமைய வேண்டும் என்று கூறினார்.
சட்டத்துக்குப் புறம்பே போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படும்போது அவை குடும்பங்களின் சமூகக் கட்டமைப்பையே அழிக்கின்றன என்றும், இது சமுதாயத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் பேராயர் சுள்ளிக்காட் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.