ஜூன் 15, 2013. கற்றனைத்தூறும்...... சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு
கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது
2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர்
நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க
வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். நான் இதை குடித்தவுடன் (மாலை
5 மனிக்கு), விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில்
எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது. கல்லானது சிறுநீரகத்திலிருந்து
சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும். பயந்துவிடாமல், நாம்
பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத
நிலை வரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர் கழித்தால், வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு வடிவம்(SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து இரத்தமும் வரலாம்,
ஒரு நாளில் சரியாகிவிடும். அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு
கல் பிரச்சனை போய்விட்டது, என, தன் அனுபவத்தை எழுதியுள்ளார் ரவூஃப் இரகுமான் என்பவர். சிறுநீரகக்கல்
வலி வந்த பிறகு அது தொடர்பாக, நான் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில : துளசி
இலை சாறுடன், தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து விடுமாம். ஆப்பிள் அடிக்கடி
சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சையில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும்,
கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும், இந்தப் பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம்
குளோரைடு, கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். மாதுளம் பழத்தின் விதையைப்
பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் சேர்த்து
சாப்பிட்டால், கல் பிரச்சனை தீருமாம். அத்திப்பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி,
ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம். தண்ணீர்பழம்(water
melon ) அதிகம் உண்பதால் கல் பிரச்சனை தீருமாம். இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும்
கல் உருவாவதைத் தடுக்கலாமாம். வாழைத்தண்டு சாறுக்கு கல் உருவாவதைத் தடுக்கவும், உருவான
கல்லை உடைக்கவும்(diffuse) திறன் உள்ளதாம். மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும்
தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம்
என்கிறார்கள். இம்முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக
பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சனை வராதவர்களும் பின்பற்றலாம். கல் ஏற்பட்ட பின் வலியை
பொறுக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது, என சில ஆலோசனைகளையும் தந்துள்ளார்
ரவூஃப் இரகுமான்.