உலகின் பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சி சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்
ஜூன்,13,2013. சுவிட்சர்லாந்தில் ஜூன் 13, இவ்வியாழன் முதல் 16ம் தேதி ஞாயிறு முடிய நடைபெறும்
பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சியில் உலகின் ஐந்து கண்டங்களிலிருந்தும் வந்துள்ள ஓவியர்கள்
300 ஓவிய அரங்குகளை உருவாகியுள்ளனர். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள 39 நாடுகளிலிருந்தும்
போட்டியாளர்கள் வந்துள்ளனர். ஜெர்மனியிலிருந்து 60 பேரும், இலண்டனிலிருந்து 40 பேரும்,
அமெரிக்காவிலிருந்து 90 பேரும் வந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் 30 பேர் பங்கு பெறுகின்றனர்,
இவர்களது ஓவியம் 65,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஓவியப்
போட்டியில் கலந்துகொள்ள 1000 ஓவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். நேரடி ஓவியங்கள், வீடியோக்கள்,
காட்சிப் படைப்புகள், சிற்பங்கள் ஆகியவை ஓவியக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இவையனைத்தும்
அதிக விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு
"Swiss Art Awards" வழங்கப்படும்.