ஜூன் 13, 2013. . கற்றனைத்தூறும்...... பீட்ரூட்டின் மகத்துவங்கள்
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர்,
செலினியம், சிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
எனவே இத்தகைய சத்து நிறைந்த பீட்ரூட்டை சாறாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். குடல்புண்
உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டை சாறு எடுத்து தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் விரைவில்
குணமாகிவிடும். பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம்
மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி சுத்தமாக இருக்கும். பீட்ரூட்டை
தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம். தினமும் பீட்ரூட்
சாறு குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை
அழித்துவிடும். இதனால் புற்றுநோயைத் தடுக்கலாம். பீட்ரூட் சாறு, இரத்த அழுத்தத்தைக்
கட்டுப்பாட்டுடன் வைக்கும், செரிமானப் பிரச்சனையை நீக்கும், மூளையில் இரத்த ஓட்டத்தை
அதிகரித்து, முதுமை மறதி(Dementia) மற்றும் ஞாபக மறதியை(Alzheimer) தடுக்கும். கையைத்
தீயில் சுட்டுக் கொண்டால் அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால்,
தீப்புண் கொப்பளமாகாமல் சீக்கிரம் குணமாகும். பொடுகு தொல்லையால் அவதியுறுபவர்கள்,
வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால் பொடுகை
போக்கிவிடலாம் என்கின்றனர்.