ஜூன்,11,2013. பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பால் இந்தியாவில் நாள்
ஒன்றிற்கு ஏறத்தாழ சுமார் 333 ஏக்கர் வனப்பகுதி காணாமல் போகின்றன என சூற்றுச்சூழல் மற்றும்
வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெறப்பட்ட
புள்ளி விபர அறிக்கை கூறுகிறது. நிலக்கரிச் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், தொழிற்சாலைகள்,
ஆற்றுப்படுகைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.