2013-06-07 16:40:06

மத்திய ஐரோப்பிய நாடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ் உதவிகள்


ஜூன்,07,2013. ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளை பெருமளவில் சூழ்ந்துள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு உதவிகள் செய்து வருகிறது.
கடந்த 70 ஆண்டுகள் வரலாற்றில் காணப்படாத அளவு Danube ஆற்றில் 5 மீட்டர் உயரம் எழுந்துள்ள இந்த வெள்ளத்தால், இதுவரை செக் குடியரசில் மட்டும் 17 பேர் இறந்துள்ளனர் என்றும், 2600 கோடி டாலர்கள் மதிப்புள்ள அளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
காரித்தாஸ் இதுவரை ஒரு இலட்சம் யூரோக்களை உதவி நிதியாக வழங்கியுள்ளது மட்டுமல்லாமல், நேரடியாக பல இடங்களில் துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.