Down Syndromஎனப்படும் குறை உள்ளகுழந்தைகளை கருவிலேயே
கண்டறிய புதிய வழி
ஜூன்,07,2013. உடல் மற்றும் மன நலத்தில் குறைபாடுகளை விளைவிக்கும் Down Syndrom எனப்படும்
குறை உள்ளக் குழந்தைகள் தாயின் கருவில் இருக்கும்போதே, இக்குறையைக் கண்டறிய முடியும்
என்று மருத்துவ அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பிறக்கவுள்ள குழந்தையிடம் Down Syndrom
நோய்க்கான அறிகுறி காணப்படுகிறதா என்பதைக் கண்டறிவதற்கு தற்போது கடைப்பிடிக்கப்படும்
நடைமுறைகள் சற்று தாமதமானவை என்று கருதப்படுகின்றன. இப்போது கண்டறியப்பட்டுள்ள புதிய
நடைமுறையில், தாயின் இரத்தத்தை பரிசோதிப்பதன் மூலம் அதனைக் கண்டுபிடித்துவிட முடியும்
என்று மருத்துவ அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தாயின் இரத்தத்தில் காணப்படும், முற்றாக
வளர்ந்த கருவின் DNA தகவல்கள் அடங்கிய அணுக்களை இந்த முறைமூலம் பரிசோதிக்க முடியும். இலண்டனில்
உள்ள King’s College மருத்துவமனையில் 1000 பெண்களிடத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம்,
இந்த முறை 99 விழுக்காட்டிற்கும் அதிகப்படியாக சரியான முடிவைக் கூறமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த
இரத்த ஆய்வு முறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆய்வு ரீதியாக 20,000 பெண்களிடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதென்பது
குறிப்பிடத்தக்கது.