சமய வழிபாட்டில் ஈடுபட்ட ஏழு கிறிஸ்தவர்களுக்கு சீனாவில் சிறைத்தண்டனை
ஜூன்,03,2013. அங்கீகரிக்கப்படாத சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில்
ஏழு கிறிஸ்தவர்களுக்கு மூன்று முதல் ஏழரை ஆண்டுகள் வரை தன்டனை வழங்கியுள்ளது சீன அரசு. கடந்த
ஆண்டு ஒரு வீட்டினுள் புகுந்து அங்கு சமய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஏறத்தாழ 50 பேரைக்
கைதுசெய்த சீனக் காவல்துறை அதில் பலரை தடுப்புக்காவலிலும் வைத்திருந்தது. இதில் ஒரு தாயும்
அவரின் ஒரு வயது குழந்தையும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் Ye நகராட்சியின்
காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட இந்த கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்கு சட்டபூர்வமான ஆதாரங்களை
வழங்க மறுத்துள்ளது அரசு. இவர்களுள் ஏழுபேருக்கு தற்போது மூன்று ஆண்டு முதல் ஏழரை
ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.