புற்றுநோயாளிச் சிறாரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு உங்களை அதிகமாக அன்பு செய்கிறார்
ஜூன்,01,2013. உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 22 புற்றுநோயாளிச்
சிறாரிடம், இயேசு அவர்களை அதிகமாக அன்பு செய்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். புற்றுநோயால்
கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள 22 சிறார், இன்னும், அவர்களின் பெற்றோர், ஜெமெல்லி மருத்துவமனையின்
பிரதிநிதிகள், UNITALSI தன்னார்வ அமைப்பின் பணியாளர்கள் என ஏறக்குறைய 70 பேரை, திருத்தந்தை
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்தபோது
இச்சிறாருக்கு நம்பிக்கையும் அன்பும் நிறைந்த செய்தியை வழங்கினார். பிரான்சின் லூர்து
அன்னைத் திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்ட பின்னர் திருத்தந்தையைச் சந்தித்த
இச்சிறார், தாங்கள் வரைந்திருந்த, மசபியேல் லூர்து அன்னைமரிக் குகையின் படத்தை திருத்தந்தைக்குப்
பரிசாக அளிப்பதாகத் தெரிவித்தனர். மேலும், திருத்தந்தைக்காகத் தாங்கள் செபித்ததாகவும்
கூறினர். இந்தச் சிறார் குழுவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
மூன்று சகோதரிகளும் இருந்தனர். இச்சிறாருக்குத் தான் வழங்கும் ஆசீர், கடவுளிடமிருந்து
கிடைக்கும் “அன்பு அணைப்பு” என்று சொல்லி இவர்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்