நேர்காணல் – நீதிக்காக உயிர்த் தியாகம் செய்த எல் சால்வதோர் மறைசாட்சிகள் – அ.ப மரிய
அருள் ராஜா சே.ச.
மே,30,2013. இயேசு சபை அருள்பணியாளர் மரிய அருள் ராஜா சென்னையிலுள்ள இயேசு சபையினரின்
இறையியல் மையத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக விவிலியப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
தமிழகத்தில் பல்வேறு அடித்தட்டுக் குழுக்களுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். அடித்தட்டு
மக்களின் அன்றாடப் போராட்டம், விவிலிய உலகம் இவ்விரண்டுக்கும் இடையே உரையாடல் நடத்தி
புதிய சிந்தனைகளையும் வழங்கி வருகிறார்.