2013-05-30 16:16:50

நம் பெற்றோருக்காக இறைவனுக்கு நன்றி சொல்ல நாம் மறக்கக்கூடாது - திருத்தந்தை


மே,30,2013. நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோருடன் சுமுகமான உறவு கொள்ளாமல் இருந்தாலும், அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்ல நாம் மறக்கக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
போலந்து நாட்டில் 966ம் ஆண்டு திருமுழுக்கு பெற்ற முதல் கிறிஸ்தவர்களின் நினைவைக் கொண்டாட, ஜூன் முதல் தேதி, இச்சனிக்கிழமையன்று அந்நாட்டின் Lednica Lake எனுமிடத்தில் பல்லாயிரம் இளையோர் கூடிவரும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்.
இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து, இப்புதனன்று வழங்கிய மறைகல்வி உரைக்குப்பின் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து பெற்றோருக்கும் சிறந்ததோர் அடையாளமாக விளங்குபவர் விண்ணகத் தந்தை என்றும், அவரே நம் ஒவ்வொருவரையும் அக்கறையுடன் உருவாக்கி, வழிநடத்துகிறார் என்றும் கூறினார்.
பெற்றோராக மாறும் பொறுப்பு வரும் வேளையில், அதனை ஏற்றுக்கொள்ள இளையோர் தயங்கக்கூடாது என்று கூறியத் திருத்தந்தை, ஆன்மீகப் பெற்றோராகவும் பொறுப்பேற்கும்படி இளையோரை ஊக்குவித்தார்.

ஆதாரம் – VIS








All the contents on this site are copyrighted ©.