2013-05-27 17:27:58

திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலகத்தின் டுவிட்டர் செய்திகள்


மே,27,2013. ஒவ்வொருமுறையும் நாம் சுயநலத்திற்கு நம்மைக் கையளித்து, இறைவனுக்கு மறுப்புத் தெரிவிக்கும்போது, நமக்கான இறைவனின் அன்புத்திட்டத்தைப் பாழாக்குகின்றோம் என தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வரி கருத்துக்களை வழங்கி வரும் திருத்தந்தை, நம் சுயநலத்தால் வழங்கப்படும் மறுப்பினால் இறைவனின் அன்புத்திட்டத்தையே பாழாக்குகின்றோம் என ஞாயிறன்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள திருப்பீடச்செயலகம், 'கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் சகிப்பற்றத்தன்மைகள், குறிப்பாக சகிப்புத்தன்மை என்ற பெயரால் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள், வெளிப்படையாக, வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.