திருத்தந்தை பிரான்சிஸ் : மாஃபியா குழுக்கள் மனம் திரும்பச் செபிக்குமாறு அழைப்பு
மே,27,2013. தன் மூவேளை செப உரையின் இறுதியில், சனிக்கிழமையன்று இத்தாலியின் பலெர்மோவில்
அருளாளராக அறிவிக்கப்பட்ட அருள்திரு ஜூசப்பே புலிசி குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை. 1993ம்
ஆண்டு மாஃபியா கும்பலால் கொல்லப்பட்ட இந்த குரு இளையோர்க்கெனெ தன்னை அர்ப்பணித்து பணியாற்றியவர்
என்ற திருத்தந்தை, மாஃபியா கும்பல்களால் அடிமைத் தொழிலிலும், பாலியல் தொடர்பானத் தொழிலும்
வற்புறுத்தப்பட்டு வரும் எண்ணற்ற மக்கள் குறித்த கவலையையும் வெளியிட்டார். மக்களை,
தவறான முறையில் பயன்படுத்தி சுரண்டி வாழும் இத்தகைய மாஃபியா குழுக்கள் மனம் திரும்ப வேண்டும்
என இறைவனிடம் செபிப்போம் எனவும் மக்களை நோக்கி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு
விடுத்தார் திருத்தந்தை.