2013-05-25 17:00:53

இத்தாலிய அரசுத்தலைவரின் வாழ்த்துச் செய்தி


மே,25,2013. இத்தாலியின் சிசிலித் தீவிலுள்ள பலேர்மோவில் அருள்பணியாளர் Giuseppe Puglisi இச்சனிக்கிழமையன்று முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டதையொட்டி பலேர்மோ பேராயர் கர்தினால் Paolo Romeo அவர்களுக்குத் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitano.
மிகுந்த தாராள மனத்துடனும், அதிகமானத் துணிச்சலுடனும் வாழ்ந்த அருள்பணியாளர் Puglisi கிறிஸ்தவ விசுவாசத்துக்காக உயிரைக் கொடுத்துள்ளார் என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அரசுத்தலைவர் Napolitano.
மாஃபியா குற்றக்கும்பலுக்கு எதிராகக் குரல் எழுப்பிய அருள்பணியாளர் Puglisi பலேர்மோவில் San Gaetano ஆலயத்துக்கு அருகில் 1993ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற இத்திருப்பலியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
56 வயது நிரம்பிய இக்குருவை கொலை செய்தவர்களில் ஒருவரான 48 வயது Salvatore Grigoli, இக்குருவைப் போல புன்முறுவலுடன் காணப்பட்ட ஒருவரைத் தான் கண்டதில்லை, இப்போது தான் புதிய மனிதராக மாறியுள்ளதாகச் சாட்சி சொல்லியிருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.