பாகிஸ்தானில் 250 கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேறும்
கட்டாயம்
மே,22,2013. பாகிஸ்தானில் தெற்கு பஞ்சாப் பகுதியில் Khanewal என்ற மாவட்டத்தில் 250 கிறிஸ்தவக்
குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன்னர் இலாகூர் பகுதியில் புனித யோசேப்பு குடியிருப்பில் நிகழ்ந்த
வன்முறையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதுபோல், மீண்டும் தற்போது நிகழ்ந்துள்ளது, அந்நாட்டில்
கிறிஸ்துவர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் வன்முறையை சுட்டிக்காட்டுகிறது என்று Fides
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 15 நாட்களுக்கு முன், Asher Yaqoob என்ற ஒரு கிறிஸ்தவ
வர்த்தகருடன் சில இஸ்லாமியர்கள் மேற்கொண்ட ஒரு வாக்குவாதம் இந்த வன்முறைக்கு வழிவகுத்தது
என்று Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது. தற்போதைய வன்முறையில் 1500க்கும்
அதிகமான கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இந்த மோதல்களில்
இதுவரை 20 கிறிஸ்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் Fides செய்தி அறிவித்துள்ளது.