வெனெசுவேலாத் திருஅவையில் கருக்கலைப்புக்கு எதிரான ஓராண்டு நடவடிக்கை
மே,21,2013. தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் மனித வாழ்வை ஆதரிக்கும் 13வது ஆண்டு
நிகழ்வு, இவ்வாண்டு முழுவதும் நடத்தப்படும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார். நலிந்த
மற்றும் ஆதரவற்ற மனித உயிர்களைக் கொல்வதே கருக்கலைப்பு என்று சொல்லி அதைப் புறக்கணிக்குமாறும்,
மனித வாழ்வைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தி இவ்வாண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை
நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது வெனெசுவேலாத் திருஅவை. கருக்கலைப்பை ஆதரிக்கும் அனைத்துலக
நிறுவனங்கள் திருஅவையின் இம்முயற்சியை விரும்புவதில்லை என்றுரைத்த, வெனெசுவேலா ஆயர் பேரவையின்
குடும்பநலப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Rafael Conde Alfonzo, திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவான
நடவடிக்கைகள் இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறினார்.