காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினரால் தொடரும் அச்சுறுத்தல்
மே 20, 2013. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்
போனவர்கள் தொடர்பில் வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவைத்
திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக
தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள்,
2009ம் ஆண்டு மே 18ம் தேதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு ஏற்ப சரணடைந்தவர், மற்றும்,
இதன் பின்னர் சரணடைந்தவர்கள் நிலை என்னவென்று தெரியா நிலையில், அவர்களது உறவினர்கள் ஆட்கொணர்வு
மனுக்களை கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதைத்
தொடர்ந்து, வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதனைத் தாக்கல் செய்தவர்களுக்கு, அச்சுறுத்தல்கள்
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.