2013-05-18 15:39:48

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இசுலாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்துகின்றனர்


மே,18,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் ஆதரவு பெற்ற உப இராணுவக் குழுக்கள், ஆலயங்களையும், மறைப்பணித்தளங்களையும் சூறையாடி, கொள்ளையிட்டு அழிக்கின்றன என அந்நாட்டின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
Aid to the Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்திடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளன அவ்வட்டாரங்கள்.
கடந்த மார்ச் மாதத்தில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த Séléka என்ற இசுலாமிய புரட்சிக்குழுவால் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 25ம் தேதி இரவில் Bangui உயர்மறைமாவட்ட சான்சிலர் அருள்பணியாளர் Dieu-Béni Bangaவும், கடந்த ஏப்ரல் 27ம் தேதி பேராலய அதிபர் அருள்பணியாளர் Francis Sikiம் கடத்தப்பட்டதையும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.