2013-05-15 17:38:32

Boko Haram போன்ற தீவிரவாதக் குழுக்களை அடக்க நைஜீரிய அரசு தயங்குகிறது - ஆயர் Stephen Dami Mamza


மே,15,2013. Boko Haram போன்ற தீவிரவாதக் குழுக்களை அடக்குவதற்கு நைஜீரிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்குகிறது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
2015ம் ஆண்டு வரவிருக்கும் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன், நைஜீரிய அரசின் ஆளும் கட்சியும், அரசுத் தலைவர் Goodluck Jonathan அவர்களும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க தேவையான முடிவுகளை எடுக்கத் தயங்குகின்றனர் என்று Yola மறைமாவட்ட ஆயர் Stephen Dami Mamza கூறினார்.
நைஜீரிய நாட்டில் அவசரகால அறிக்கையொன்றை அரசு வெளியிட்டு, போர்கால அடிப்படையில் செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்று ஆயர் Mamza, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியொன்றில் எடுத்துரைத்தார்.
2015ம் ஆண்டு தேர்தலில் வென்றுவிட வேண்டுமென்று அரசு தன் செயல்பாடுகளை நிறுத்தினால், Boko Haram போன்ற தீவிரவாத குழுக்களின் பிடியில் முழு நாடும் சிக்கிவிடும் ஆபத்து உள்ளது என்று ஆயர் Mamza தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : ICN / ACN








All the contents on this site are copyrighted ©.