2013-05-14 16:15:38

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி


மே,14,2013. நான் எனது அன்றாட வாழ்வில் கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கிறேனா? எனது விசுவாசத்தை மதிப்போடு, அதேநேரம் துணிச்சலுடன் வெளிப்படுத்த என்னால் முடிகின்றதா? என்ற கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் மாலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் திருத்தந்தை.
மேலும், அனைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தை நிறைவு செய்யும் விதமாக, அம்மாதத்தின் இறுதி நாளான 31ம் தேதியன்று இரவு 8 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் விசுவாசிகளுடன் சேர்ந்து செபமாலை செபிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.