2013-05-13 16:45:47

கேரள இளையோரின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்ட கேரள திருஅவையின் கருத்தரங்கு


மே,13,2013. கேரள இளையசமுதாயத்தில் விவிலியம் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களின் இலக்கிய ஆர்வத்தை தூண்டவும் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த உள்ளது கேரள திருஅவை.
15 முதல் 20 வயதிற்குட்பட்ட இளையோருக்கென கொச்சியின் மேய்ப்புப்பணி மையத்தில் இம்மாதம் 23ம் தேதி இரண்டு நாள் கருத்தரங்கை துவக்கி வைக்க உள்ளார் பேராயர் பிரான்சிஸ் கல்லரக்கல்.
இக்கருத்தரங்கில் ஏழுக்கும் மேற்பட்ட கேரள எழுத்தாளர்கள் கத்தோலிக்க இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்க உள்ளனர்.
கத்தோலிக்க இளையோரிடையே ஓவியத்திறமையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு கேரள ஆயர்பேரவை, கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் - UCAN








All the contents on this site are copyrighted ©.