மே,11,2013. இந்தியாவில் சிறப்பாகப் பணியாற்றிய தாதியர்களைக் கவுரவிக்கும் விதமாக, அனைத்துலக
தாதியர் தினமான இஞ்ஞாயிறன்று 35 தாதியர்களுக்கு விருது வழங்கவுள்ளார் இந்தியக் குடியரசுத்தலைவர்
பிரணாப் முகர்ஜி. தேசிய Florence Nightingale என்ற இவ்விருது, தங்களது பணிகளில் மிகுந்த
அர்ப்பணத்தோடும், நேர்மையோடும், பரிவோடும் பணிசெய்த தாதியருக்கு அனைத்துலக தாதியர் தினமான
மே 12ம் தேதியன்று ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்திய நலவாழ்வு அமைச்சகம் 1973ம்
ஆண்டில் இவ்விருதை உருவாக்கியது. 50 ஆயிரம் ரூபாய் காசோலை, ஒரு சான்றிதழ், ஒரு பதக்கம்
ஆகியவற்றைக் கொண்ட இவ்விருதை இதுவரை 237 தாதியர் பெற்றுள்ளனர். இஞ்ஞாயிறன்று மேலும் 35
தாதியர் பெறவுள்ளனர். 1820ம் ஆண்டு மே 12ம் தேதி பிறந்த Florence Nightingale, நவீன
தாதியர் மருத்துவத்தின் நிறுவனராவார். 1965ம் ஆண்டிலிருந்து அனைத்துலக தாதியர் கழகம்
Nightingaleன் பிறந்தநாளை அனைத்துலக தாதியர் தினமான கடைப்பிடித்து வருகிறது.