2013-05-10 16:50:13

உரோம் நகரில் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் ஊர்வலம்


மே,10,2013. மே மாதம் 12ம் தேதி இஞ்ஞாயிறன்று உயிர்களை மதிக்கும் நடைபயணம் என்ற கருத்தில் உரோம் நகரில் நடைபெறும் ஊர்வலத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்திற்கு முன்னதாக, சனிக்கிழமையன்று, உயிரியல் நன்னெறி என்ற கருத்தில் Regina Apostolorum எனும் பாப்பிறை நிறுவனத்தில் நடைபெறும் கருத்தரங்கில், திருப்பீட நீதித் துறையின் தலைவர் கர்தினால் Raymond Burke கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் நகரின் முக்கியமான ஓர் அடையாளமான Coloseum திடலிலிருந்து கிளம்பும் இந்த ஊர்வலத்தில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முக்கியமான் நபர்கள் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவில் வளரும் குழந்தைகளை அழிக்கும் சட்டம் 1978ம் ஆண்டு இத்தாலி நாட்டில் அமலாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 50 இலட்சம் குழந்தைகள் கருவில் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ள Virginia Coda Nunciante அவர்கள் CNA செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.