2013-05-09 16:11:08

உலக இளையோர் நாள் நிகழ்வுகள் புனித பாத்திமா அன்னைக்கு அர்ப்பணம் - ரியோ டி ஜெனீரோ பேராயர் Tempesta


மே,09,2013. நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளை புனித பாத்திமா அன்னைக்கு அர்ப்பணிக்கப்போவதாக ரியோ டி ஜெனீரோ பேராயர் Orani João Tempesta கூறினார்.
மே 13ம் தேதி, வருகிற திங்களன்று கொண்டாடப்படும் பாத்திமா அன்னை திருநாளையொட்டி அங்கு மே 12, 13 ஆகிய நாட்கள் நிகழும் கொண்டாட்டங்களை தலைமையேற்று நடத்த அழைக்கப்பட்டிருக்கும் பேராயர் Tempesta, இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் பாத்திமா அன்னையின் திருநாளைச் சிறப்பிக்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாண்டு நிகழ்வுகளுக்குத் தலைமைத் தாங்கி, திருப்பலியாற்ற தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தனக்குக் கிடைத்த அருள் என்று ரியோ டி ஜெனீரோ பேராயர் Tempesta எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியை பாத்திமா அன்னைக்கு அர்ப்பணித்துள்ளதாக அறிவித்தது தன்னையும் ஊக்குவித்தது என்றும், எனவே அந்த அன்னையிடம் உலக இளையோர் நாளையும் தான் அர்ப்பணிக்க இருப்பதாக பேராயர் Tempesta, கத்தோலிக்கச் செய்தி நிறுவனமான Zenitக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.