மே,07,2013. நேபாளத்தில் கத்தோலிக்கரும் இந்துக்களும் ஒரே நாளில் அன்னையர் தினத்தைக்
கடைப்பிடிப்பது அவ்விரு மதத்தவருக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதற்கு சான்று
சொல்வதாய் இருக்கின்றது என ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது. மே 09, வருகிற வியாழக்கிழமை
சிறப்பிக்கப்படும் இவ்வன்னையர் தினத்தைமுன்னிட்டு கத்தோலிக்கச் சிறார் தங்களது பெற்றோருடன்
ஓர் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர் என்று அருள்பணி ராபின் ராய் கூறினார். இதே
நாளில் இந்துக்களும் அன்னையர் தினத்தைக் கடைப்பிடிக்கவுள்ளனர். நேபாளத்தில் கத்தோலிக்கருக்கும்
இந்துக்களுக்கும் இடையே அடிக்கடி திருமணங்கள் இடம்பெறுவதாகவும், இந்நிகழ்வுகளில் இவ்விரு
மதத்தவருமே கலந்து கொள்வதாகவும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.