2013-05-04 15:42:41

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கம் : அன்னைமரியிடம் செபியுங்கள்


மே,04,2013. “நமது தினசரி வாழ்வில் நமது விசுவாசத்தை எப்படி வாழ்வது மற்றும் ஆண்டவருக்கு நம் வாழ்வில் அதிக இடம் எப்படி ஒதுக்குவது என்பது குறித்து நமக்குக் கற்றுத் தருமாறு நம் அன்னையிடம் கேட்போம்”
இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பல பொதுநிலை பக்தசபைகளின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்குத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அனைத்து விசுவாசிகளுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது திருத்தந்தை அவர்களின் இச்சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒன்றாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.