மே,03,2013. ஓ! புனித பிரான்சிஸ் அசிசியாரே, எம் இதயங்களில் அமைதி நிலவ இறைவனிடம் எமக்காகப்
பரிந்துபேசும் என்று அமைதிக்காகச் செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியின்
அசிசி நகரில் புனித பிரான்சிஸின் கல்லறையில் அமைக்கப்பட்டுள்ள வெப்காமைப் பார்த்த பின்னர்,
sanfrancesco.org என்ற இணையதளத்தில் இச்செபத்தை எழுதியுள்ளார் திருத்தந்தை. மேலும்,
மே மாதத்தில் குடும்பங்களில் செபமாலையைச் சேர்ந்து செபிப்பது எவ்வளவு அழகானது. செபம்,
குடும்ப வாழ்வை உறுதிப்படுத்துகின்றது என்று இவ்வெள்ளிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உரோம்
புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்று அனைத்து விசுவாசிகளுடன் சேர்ந்து செபமாலை செபிக்கவுள்ளார்
திருத்தந்தை. மே மாதம் அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பதால், இம்மாதத்தின்
சனிக்கிழமையன்று புனித மேரி மேஜர் பசிலிக்கா செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.