ஆண்டுதோறும் 2,70,000க்கு மேற்பட்ட பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர் : ஐ.நா.
மே,03,2013. ஆண்டுதோறும் 2,70,000க்கு மேற்பட்ட பாதசாரிகள் தங்களது உயிரை இழக்கும்வேளை,
போக்குவரத்துப் பாதுகாப்புகளை மேம்படுத்த வேண்டுமென்று அரசுகளைக் கேட்டுள்ளது WHO என்ற
அனைத்துலக நலவாழ்வு நிறுவனம். ஆண்டுதோறும் 12 கோடியே 40 இலட்சம் பேர் சாலை விபத்துக்களில்
இறக்கின்றனர், இவ்வெண்ணிக்கையில் 22 விழுக்காட்டினர் பாதசாரிகள் என்று கூறும் WHO நிறுவனம்,
பாதசாரிகளைப் பாதுகாப்பதற்கு மிகுந்த கவனம் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது. அனைத்துலக
சாலை பாதுகாப்பு வாரத்தை மே 6, வருகிற திங்களன்று தொடங்கவுள்ள WHO நிறுவனம், உலகின் சாலைகளில்
ஒவ்வொரு வாரமும் 5,000த்துக்கு அதிகமான பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர் என்றும் கூறியது. 2011ம்
ஆண்டு முதல் 2020ம் ஆண்டுவரை சாலை பாதுகாப்புக்கானப் பத்தாண்டு என்ற நடவடிக்கையையும்
அனைத்துலக நலவாழ்வு நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது.