2013-05-03 16:33:05

Rana Plaza கட்டிட விபத்துக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு, பங்களாதேஷ் காரித்தாஸ்


மே,03,2013. பங்களாதேஷில் Rana Plaza என்ற எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்நாட்டு காரித்தாஸ் இயக்குனர் Benedict Alo D'Rozario கூறினார்.
Rana Plaza கட்டிட விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தை செபித்ததோடு மனித மாண்பின் மதிப்பு உணரப்பட வேண்டுமென அழைப்பு விடுத்ததற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டுமென்று கூறினார் D'Rozario.
அனைத்துலக தொழிலாளர் தினத்தன்று புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியிலும் Rana Plaza கட்டிட விபத்து குறித்து திருத்தந்தை குறிப்பிட்டார் என்றுரைத்த D'Rozario, அங்கு வேலை செய்தவர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார் என்றார்.
கடந்த மாதம் 24ம் தேதி இடம்பெற்ற இக்கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அங்கு இடம்பெறும் மீட்புப்பணிகளுக்கும் காரித்தாஸ் நிறுவனம் உதவி செய்து வருகின்றது என்றும் அவர் ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.